அமித் ஷாவிடம் ஓ.பி.எஸ் ரகசியங்களை போட்டுக் கொடுத்த அமைச்சர்கள்… அதிரி புதிரியாகும் அதிமுக..!

 

அமித் ஷாவிடம் ஓ.பி.எஸ் ரகசியங்களை போட்டுக் கொடுத்த அமைச்சர்கள்… அதிரி புதிரியாகும் அதிமுக..!

அமித் ஷாவிடம் ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி ஒரு முக்கிய தகவலை சொல்லிவிட்டு வரத்தான் அவர் சென்றதாகக் கூறப்படுகிறது. அது என்ன தகவல் என்பது சொன்னவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் மட்டுமே தெரியும்.

மத்திய அமைச்சரை சந்திக்கப் போகிறேன் என்கிற சாக்கை சொல்லி அமைச்சர்களான தங்கமணியும், எஸ்.பி.வேலுமணியும் டெல்லிக்கு சென்று முகாமிட்டுள்ளனர். கோயல்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றுள்ள நிலையில் டெல்லியில் இருந்து எடப்பாடி தரப்புக்கு வந்த போன் அடிப்படையில்தான் அந்த அமைச்சர்கள் அலறியடித்து சென்றதாக தகவல்.  அப்படியே பொதுக்குழு கூட்டத்தை பற்றியும், எதிர்கட்சிகளின் நிலை பற்றியும் பேசி உள்ளார்கள். குறிப்பாக அமித் ஷாவிடம் ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி ஒரு முக்கிய தகவலை சொல்லிவிட்டு வரத்தான் அவர் சென்றதாகக் கூறப்படுகிறது.  அது என்ன தகவல் என்பது சொன்னவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் மட்டுமே தெரியும்.OPS 

அடுத்து  மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களின் நிலைமை பற்றியும் கூறி இருக்கிறார்கள். ஆனால், தங்கமணியும், வேலுமணியும்,  ’’ஆட்சியும், கட்சியும் இப்போது இருக்கும் நிலையிலேயே இருக்க வேண்டும். மாதம் வருவது நிற்க கூடாது. இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்கு பங்கம் வரக்கூடாது. கட்சியை பலப்படுத்தி விட்டுத் தான் உள்ளாட்சி தேர்தலை சந்தித்து எப்படியாவது ஜெயித்து நம் ஆட்களை பதவியில் உட்கார வைக்க வேண்டும். அதுவரை பாஜகவை ஒதுக்கி  வைக்க வேண்டும்.amit shah

 இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்பதை பாஜகவுக்கு புரிய வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு தான் டெல்லி சென்று இருக்கிறார்கள்.  அவர்களுக்கு இப்போதைக்கு ஒற்றை தலைமையா இரட்டை தலைமையா என்பது பற்றியெல்லாம் கவலையே இல்லை.  எப்படியாவது சம்பாதிக்க வேண்டும். அதனல் யார் பவர்புல்லாக இருக்கிறாரோ அவர் பக்கம் இவர்கள் சாய்ந்து விடுவது என்கிற நிலையில் இருக்கிறார்கள் எடப்பாடியின் வலது கரங்களான எஸ்.பி.வேலு மணியும், தங்கமணியும். பிழைக்கத்தெரிந்த அரசியல்வாதிகள்.