அமித்ஷா பேரணி: 500 ரூபாயுடன் பிரியாணி, வர மறுத்தால் மிரட்டல்?

 

அமித்ஷா பேரணி: 500 ரூபாயுடன் பிரியாணி, வர மறுத்தால் மிரட்டல்?

அமித்ஷா பேரணியில் கலந்துகொள்ளா மறுப்பவர்களை பாஜக முன்னாள் எம்எல்ஏ சுபாஷ் ஷிரோத்கரின் அடியாட்கள் மிரட்டி அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

ஷிரோடா: அமித்ஷா பேரணியில் கலந்துகொள்ளா மறுப்பவர்களை பாஜக முன்னாள் எம்எல்ஏ சுபாஷ் ஷிரோத்கரின் அடியாட்கள் மிரட்டி அழைத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

கோவாவின் தெற்கு பகுதியில் உள்ள கிராமம் ஷிரோடா, அடல் பூத் கார்யகர்தா சம்மேலனம் எனும் பாஜகவின் பேரணி இங்குள்ள பாம்போலிம் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா வருகை புரிந்திருந்தார். அமித்ஷா வருகையை முன்னிட்டு அதிகமான ஆட்கள் திரட்ட வேண்டும் என்ற காரணத்தால், ஷிரோடா பகுதியில் வசிக்கும் இளைஞர்களை பாஜக முன்னாள் எம்எல்ஏ சுபாஷ் ஷிரோத்கரின் அடியாட்கள் மிரட்டி அழைத்து சென்றுள்ளனர். 1000 இளைஞர்களையாவது விழாவில் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என்பது இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

எனவே 500 ரூபாய் பணமும், சிக்கன் அல்லது வெஜிடபிள் பிரியாணியும் கொடுப்பதாக அழைத்திருக்கின்றனர். அதற்கு மறுப்பு தெரிவித்தவர்களை மிரட்டி வண்டியில் ஏற்றியுள்ளனர். இது தொடர்பாக ஷிரோடா மக்கள் மன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் கோவா முதல்வர் மனோகர் பரிக்கருடன் கலந்துகொண்ட அமித்ஷா, மாபெரும் கூட்டணி குறித்து உரையாற்றினார்.