அமித்ஷா எந்த மாநிலத்தில் காலடி எடுத்துவைத்தாலும்…. அவரு ராசி அப்படி- பொன். ராதா

 

அமித்ஷா எந்த மாநிலத்தில் காலடி எடுத்துவைத்தாலும்…. அவரு ராசி அப்படி- பொன். ராதா

அமித்ஷா எந்த மாநிலத்தில் காலடி எடுத்து வைத்தாலும் அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும் என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா எந்த மாநிலத்தில் காலடி எடுத்து வைத்தாலும் அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும் என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “அமித்ஷா எந்த மாநிலத்தில் காலடி எடுத்து வைத்தாலும் அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும். அந்த மாநிலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம். தேசியத்தை ஆதரிப்போம்.

தமிழை சொல்லி திமுகவினர் ஆட்சிக்கு வந்தார்கள். தமிழே தெரியாத தலைமுறையை உருவாக்கி உள்ளார்கள்.மொழியை சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள் மொழியே வளர்க்காத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றரை லட்சம் உறுப்பினர்களை சேர்த்து மதுரை பாஜகாவின் தன்னிகரில்லா கோட்டையாக மாறி உள்ளது.

ஆட்சிக்கு தலைநகரம் சென்னை. அரசியலுக்கு தலைநகரம் மதுரை. தற்போது பாஜகாவின் அரசியல் தலைநகரமாக மதுரை மாறியுள்ளது” என்று கூறினார்