அமித்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் – மருத்துவமனையில் அனுமதி

 

அமித்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் – மருத்துவமனையில் அனுமதி

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டிருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்

டெல்லி: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டிருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பாஜகவின் தேசிய தலைவராக இருப்பவர் அமித்ஷா. அக்கட்சி தேர்தலில் வெற்றி பெற பல வியூகங்களை வகுத்து கொடுப்பவர். மேலும், அவர்தான் பாஜக வெற்றியின் மூளையாக செயல்படுகிறார் எனவும் கூறப்படுவதுண்டு. அந்த வகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க அவர் தீவிர பணியில் தற்போதிருந்தே தொடங்கியிருக்கிறார்.

இந்நிலையில், அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதற்கான சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. கடவுள்  கருணையால், நான் விரைவில் குணமடைவேன் என கூறியுள்ளார். பன்றி காய்ச்சல் காரணமாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.