அமமுக கட்சி ஏன் செயல்படுகிறது? டிடிவி தினகரன் விளக்கம்

 

அமமுக கட்சி  ஏன் செயல்படுகிறது? டிடிவி தினகரன் விளக்கம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எதற்காக செயல்படுகிறது என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எதற்காக செயல்படுகிறது என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார்.

அம்மா மக்கள்  முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை அசோக் நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக, இரட்டை இலை சின்னத்தை மீட்கவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது. 90% அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கமே இருக்கின்றனர். என்னை பார்த்து பயப்படவில்லை என்றால் ஏன் மேடைக்கு மேடை என்னை குறித்து பேசவேண்டும். ஏற்கனவே தோல்வி அடைந்தவர்களிடம் சவால் விடுப்பது நேரத்தை வீணடிக்கும். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் வெளிப்படையாக தெரிவிப்போம்  என்றார்.