அப்பா-மகள் உறவு இடையே நுழைந்த கவின்? சோகத்தில் சேரன்! 

 

அப்பா-மகள் உறவு இடையே நுழைந்த கவின்? சோகத்தில் சேரன்! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா மற்றும் மீரா மிதுன் ஆகியோர் வெளியேறினர்.
அவர்களைத் தொடர்ந்து கடந்த வாரம் எலிமிநேஷனில் அபிராமி, சாக்ஷி, கவின், ரேஷ்மா, மதுமிதா, சரவணன், அபிராமி,சாக்ஷி மற்றும் கஸ்தூரி ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

இந்த நிலையில் இன்றைய டார்கெட் லாஸ்லியா போல் தெரிகிறது. ஏனென்றால் இன்று வெளியாகியுள்ள மூன்று புரோமோவும் லாஸ்லியா குறித்த வெளியாகியுள்ளது. பிரூட்டி காலர் ஒருவர் சேரனை, கவின் கலாய்க்கும் சமயத்தில் நீங்கள் ஏன்? கோபப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர். 

தற்போது அதனால் வருத்தமடைந்த சேரன், தர்ஷனிடம் இது குறித்துப் பேசுவது போல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், ‘எதை எங்கு எப்படி பேச வேண்டும் என்பது அவருக்கு தெரியவில்லை. சபை நாகரிகம் பார்த்து பேசவும் தெரியவில்லை. கவின் influnce செய்ததால் தான் அவள் அப்படி செய்துள்ளார்’ என்று வழக்கம் போல் கவினை குறை சொல்லி லாஸ்லியாவுக்கு ஆதரவாக வருத்தத்துடன் கூறியுள்ளார்.