அப்பாவை விரைவில் நீங்கள் மேடையில் பார்ப்பீர்கள்: விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் நெகிழ்ச்சி!

 

அப்பாவை விரைவில் நீங்கள் மேடையில் பார்ப்பீர்கள்: விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் நெகிழ்ச்சி!

நான் பதவியை தேடி கட்சிக்கு வரவில்லை. சேவையை தேடி வந்துள்ளேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை: நான் பதவியை தேடி கட்சிக்கு வரவில்லை. சேவையை தேடி வந்துள்ளேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘முழு நேர அரசியலில் தான் நான் இருக்கிறேன்.முழு நேர அரசியல் என்றால் தினமும் என்னை மீட்டிங் போட சொல்கிறீர்களா?நான் தினமும் தொண்டர்களைப் பார்க்கிறேன். நிர்வாகிகளைச் சந்திக்கிறேன். அவர்களும்  நடக்கும் கட்சி விவரங்களை எனக்கு மெசேஜ் அனுப்புகின்றனர். நான் முழு நேர அரசியலில் தான் ஈடுபட்டு வருகிறேன். கஜா புயலின் போது, கூட பத்து நாட்கள் அங்கிருந்து நிவாரண பணிகளை மேற்கொண்டேன். அதனால் என்னை பார்க்க வேண்டிய இடங்களில் கண்டிப்பாக பார்ப்பீர்கள். நான் பதவியை தேடி கட்சிக்கு வரவில்லை. சேவையை தேடி வந்துள்ளேன். எங்களுடைய ஒரே கனவு, தேமுதிக ஆட்சிக்கு வரவேண்டும், கேப்டன் முதல்வராகவேண்டும் என்பது தான். அதனால் பதவி பொறுப்பு எனக்கு தேவையில்லை. அதில் எனக்கு ஆர்வமும் விருப்பமும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

vijaykanth

தொடர்ந்து பேசிய அவர், ‘அப்பா இந்தாண்டு இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அமெரிக்காவுக்குச் சிகிச்சைக்கு செல்லவுள்ளார். அதன் பிறகு அவரைக் கண்டிப்பாக நீங்கள் மேடையில் பார்க்கலாம்’ என்று குறிப்பிட்டார்.