அப்பம் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள் யார்? ரஜினியை சீண்டும் அசாதுதீன் ஓவைசி….

 

அப்பம் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள் யார்? ரஜினியை சீண்டும் அசாதுதீன் ஓவைசி….

மோடியும், அமித் ஷாவும் கிருஷ்ணர்-அர்ஜூனன் என்றால் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள் யார் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சீண்டி உள்ளார் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி.

அப்பம் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள் யார்? ரஜினியை சீண்டும் அசாதுதீன் ஓவைசி….

கடந்த சில தினங்களுக்கு முன்பு  நடைபெற்ற துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அந்த விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கியது மற்றும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது ஆகியவற்றை பாராட்டினார். மேலும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மகாபாரத்தில் வரும் கிருஷ்ணரும், அர்ஜூனரும் போன்றவர்கள் என பாராட்டினார். 

ரஜினிகாந்தின் பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசியும் ரஜினியை சீண்டியுள்ளார். ஹைதராபாத்தில் அவரது கட்சி அலுவலகத்தில் பக்ரீத் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அசாதுதீன் ஓவைசி பேசுகையில் கூறியதாவது: ஜம்மு அண்டு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதற்கு பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் கிருஷ்ணர் மற்றும் அர்ஜூனர் என தமிழ் நடிகர் ஒருவர் புகழ்ந்து உள்ளார். அப்பம் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் யார்? இந்த நாட்டில் மீண்டும் ஒரு மகாபாரதம் நிகழ வேண்டும் என அவர் விரும்புகிறாரா? என பேசினார்.

கிருஷ்ணர்-அர்ஜூனன் விவகாரம்

இந்த சூழ்நிலையில், ரஜினிகாந்த் மீண்டும் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவையும் பாராட்டியுள்ளார். கிருஷ்ணர்-அர்ஜூனன் என்ற தனது பேச்சுக்கு விளக்கம் அளிக்கையில், அவர்கள் இருவரும் முதன்மையான தந்திரகாரர்கள். ஒருவர் திட்டத்தை  முன்வைத்தால் மற்றொருவர் அதனை நிறைவேற்றி விடுகிறார் என்று பாராட்டினார்.