அப்படியாவது உண்மை பேசுங்கள்… எச்.ராஜாவை கலாய்த்த தி.மு.க எம்.பி!

 

அப்படியாவது உண்மை பேசுங்கள்… எச்.ராஜாவை கலாய்த்த தி.மு.க எம்.பி!

ஈ.வெ.ரா, கருணாநிதி பற்றிய உண்மைகளை பா.ஜ.க-வினர் பேச வேண்டியிருக்கும் என்று எச்.ராஜா மிரட்டல் ட்வீட் வெளியிட்ட நிலையில், அப்படியாவது உண்மையை பேசுங்கள் என்று தி.மு.க எம்.பி பங்கம் செய்து பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈ.வெ.ரா, கருணாநிதி பற்றிய உண்மைகளை பா.ஜ.க-வினர் பேச வேண்டியிருக்கும் என்று எச்.ராஜா மிரட்டல் ட்வீட் வெளியிட்ட நிலையில், அப்படியாவது உண்மையை பேசுங்கள் என்று தி.மு.க எம்.பி பங்கம் செய்து பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக ஊடகங்களில் தனிநபர் விமர்சனங்கள் மிக அதிக அளவில் செய்யப்படுகின்றன. தாறுமாறாக, அவதூறான விமர்சனங்களை அதிக அளவில் தீவிர வலதுசாரிகள் செய்து வருகின்றனர். நடிகர் விஜய்சேதுபதியின் மனைவி தொடங்கி நடிகை ஜோதிகா வரை பலரையும் மிகக் கீழ்த்தரமாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 
இந்த நிலையில் பிரதமர் மோடியை மிக மோசமாக விமர்சித்த தி.மு.க பிரமுகர்கள் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. ஆனால், அப்படியான பதிவுகள் எதுவும் குறிப்பிட்டவர்களின் சமூக ஊடக பக்கங்களில் இல்லை. இதன் மூலம், தாங்களே தங்கள் தலைவர் பற்றி மிக மோசமான கருத்துக்களை மற்றவர்கள் பெயரில் பரப்பி வருவது தெரிகிறது. 

தி.மு.க-வினர் அவதூறாக பேசிவிட்டதாக கொந்தளித்த பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா, “தமிழன் பிரசன்னா, மனோ தங்கராஜ் போன்றவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களை இழிவாக பேசுவதை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கண்டிக்க வேண்டும். இல்லையேல் ஈ.வெ.ரா, அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோர் பற்றிய உண்மைகள் பாஜகவினர் பேச வேண்டி வரும்” என்று கூறியிருந்தார். இதற்கு, யார் தவறாக பேசினாலும் சரி, நாங்கள் நேர்மையாக, தனிநபர் விமர்சனத்தை நாங்கள் செய்ய மாட்டோம் என்று கூறுவது தலைவருக்கு அழகு. ஆனால், நானும் அசிங்கமாக பேசுவேன் என்று வரிந்துகட்டிக்கொண்டு வருபவரை என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில் குமார் இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் பற்றிய உண்மைகளை உரக்க பேசுங்கள் சார். அப்படியாவது பொய் பேசிக் கொண்டு, போட்டோஷாப் உலகில் வாழ்ந்து, தாமரை மலர்ந்தே தீரும் என்று மாயக் கனவு காணும் தோழர்கள், தமிழர் நலனில் அக்கறை கொண்ட கட்சி தி.மு.க மட்டும்தான் என்ற உண்மை உணரட்டும்” என்று கூறியுள்ளார்.