அப்படிப் போடு…சீனாவில் அடங்கிய கொரோனா வைரஸ் – ஒரேநாளில் 3 மட்டுமே சாவு

 

அப்படிப் போடு…சீனாவில் அடங்கிய கொரோனா வைரஸ் – ஒரேநாளில் 3 மட்டுமே சாவு

கொரோனா வைரஸ் காய்ச்சலில் இருந்து சீனா வேகமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது.

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் காய்ச்சலில் இருந்து சீனா வேகமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார அவசர நிலைஎன்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ttn

இந்த நிலையில், சீன நாடு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு கொண்டிருக்கிறது. அந்நாட்டில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது. அத்துடன் கொரோனா பிடியில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 3248 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 3 பேர் மட்டுமே உயிரிழந்து உள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் சீனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது. அதில் 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து விட்டனர். புதிதாக கொரோனா தொற்று எற்படுபவர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே உள்ளது.