அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் மீ டூ-வுக்கு ஆதரவாக ஐஸ்வர்யா ராய்!

 

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் மீ டூ-வுக்கு ஆதரவாக ஐஸ்வர்யா ராய்!

திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த மீ டூ இயக்கத்திற்கு நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மும்பை: திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த மீ டூ இயக்கத்திற்கு நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக பேசி வருகின்றனர்

பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து திரையுலக பெண்கள் பேசத் தொடங்கியதையடுத்து, இதில் ஏராளமான பிரபலங்கள் சிக்கியிருப்பது அம்பலமாகி வருகிறது. பாலிவுட்டில் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா பட்டேகர் மீது 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் தொல்லை பற்றி புகார் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பாலிவுட்டில் இந்த மீ டூ பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

இந்தியா முழுவதும் இந்த மீ டூ பாலியல் அனுபவம் மீதான காரசார விவாதங்கள் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த இயக்கம் ஒரு நல்ல அறிகுறியாக தெரிவதாக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தெரிவித்துள்ளார்.

aishwaryarai

இது குறித்து பேசிய ஐஸ்வர்யா, பெண்களின் உரிமைக்கான குரலாக இந்த மீ டூ இயக்கத்தை பார்க்கிறேன். சில விஷயங்களில் சட்டப்படி தீர்வி கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். தற்போது பெண்களின் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. இதற்கு சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன.

பெண்கள் நலனுக்காக எப்போதுமே குரல் கொடுத்து வருகிறேன். உலகம் சுருங்கிவிட்டது, எது எங்கு நடந்தாலும், சமூக வலைத்தளங்களின் மூலம் நாம் தெரிந்துக் கொள்கிறோம். சர்ச்சையான விவகாரங்களில் இருந்து ஒதுங்கி இருக்கவே விரும்புகிறேன்’ என்று ஐஸ்வர்யா ராய் பச்சன் தெரிவித்துள்ளார்.

aishwaryarai

ஐஸ்வர்யா ராய் தனது கடந்த கால வாழ்க்கையில் சல்மான் கான் உடனான விரும்பத்தகாத உறவு குறித்து பொதுவெளியில் ஏற்கனவே தைரியமாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.