அன்பேக்டு விழாவில் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

 

அன்பேக்டு விழாவில் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

அன்பேக்டு விழாவில் கேலக்ஸி பட்ஸ் என்ற பெயரில் வயர்லெஸ் இயர்பட்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ: அன்பேக்டு விழாவில் கேலக்ஸி பட்ஸ் என்ற பெயரில் வயர்லெஸ் இயர்பட்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அன்பேக்டு விழாவில் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுடன் புதிய வயர்லெஸ் பட்ஸூம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது அடுத்த தலைமுறை வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலாக திகழ்கிறது. அத்துடன் இதன் முந்தைய மாடலை விட 30 சதவிகிதம் சிறிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் ஏர்பாட்ஸ் போன்று சார்ஜிங் கேஸ் இந்த இயர் பட்ஸ் மாடலுடன் வருகிறது.

பவர்ஷேர் அம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால் இயர்பட்களை புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனை கொண்டே சார்ஜ் செய்ய முடியும். ஏ.கே.ஜி. மூலம் டியூன் செய்யப்பட்டிருக்கும் இதில் பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும், ஆம்பியண்ட் சவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும், அடாப்டிவ் டூயல் மைக்ரோபோன் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, 58 எம்.ஏ.ஹெச் பேட்டரி அளிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 6 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். இதன் சார்ஜிங் கேசில் 252 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கேஸ் 15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 1.7 மணி நேரம் பயன்படுத்தலாம். மேலும் சார்ஜிங் கேஸ் யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கும் அதிக வெர்ஷன்களை கொண்டு இயங்கும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் கேலக்ஸி கேலக்ஸி பட்ஸ் பயன்படுத்தலாம். கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் இதன் விலை 129 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.9,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சந்தைகளில் மட்டும் மார்ச் 8-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.