அன்பு ஒன்றுதான் அனாதை! அன்பு செலுத்தி அவர்களை தோற்கடியுங்கள் – ராகுல் காந்தி அட்வைஸ்

 

அன்பு ஒன்றுதான் அனாதை! அன்பு செலுத்தி அவர்களை தோற்கடியுங்கள் – ராகுல் காந்தி அட்வைஸ்

வேலையின்மை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை அழித்த பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இளைஞர்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

rahul gandhi

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் சூழலில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினரும் மாநகர நக்ஸல்களும் வதந்தியைப் பரப்புகின்றனர் என குற்றஞ்சாட்டினார். 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அன்புக்குரிய இளைஞர்களே… அமித்ஷாவும், மோடியும் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டனர்.வேலையின்மை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை அழித்த பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இளைஞர்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். வெறுப்பை மூடி மறைத்து, நம் நேசத்துக்குரிய இந்திய நாட்டை பிரிக்க முயல்கிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் அவர்களிடம் அன்பை வெளிப்படுத்துவன் மூலம் மட்டுமே நாம் அவர்களை தோற்கடிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.