அன்புமணி ராமதாஸ்- முதலமைச்சர் சந்திப்பு! சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை… 

 

அன்புமணி ராமதாஸ்- முதலமைச்சர் சந்திப்பு! சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை… 

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி முதலமைச்சர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

சென்னை கீரின்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. மக்களை தூண்டிவிட்டு அவர்களை போராட வைத்து, அதன் மூலம் திமுக இழிவான அரசியல் செய்கிறது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி முதலமைச்சர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என தெரிவித்தார்.