அன்புமணி ஆறறிவு மனிதனே கிடையாது: அமைச்சர் அன்பழகன் விளாசல்

 

அன்புமணி ஆறறிவு மனிதனே கிடையாது: அமைச்சர் அன்பழகன் விளாசல்

அன்புமணி ராமதாஸ் ஆறறிவு கொண்ட மனிதனே கிடையாது என உயர் கல்வித்துறை அமைசர் கே.பி அன்பழகன் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை: அன்புமணி ராமதாஸ் ஆறறிவு கொண்ட மனிதனே கிடையாது என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் விமர்சனம் செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தரும்புரியில் சிப்காட் கொண்டுவர உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஆண்மை இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். அவரது இந்த பேச்சு அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சிப்காட் கொண்டு வருவதற்கும் ஆண்மைக்கும் என்ன சம்பந்தம். ஆண்மை வாரிசு உருவாக்கத்தான் தேவைப்படும். எனக்கு வாரிசு இருக்கிறது. எதற்கு எதை சம்பந்தப்படுத்தி பேச வேண்டும் என்பது கூட தெரியாத நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருக்கிறார். அன்புமணி ராமதாஸ் ஆறறிவு கொண்ட மனிதனே கிடையாது. அவருக்கு ஐந்தறிவு மட்டும்தான் இருக்கிறது என்றார்.