அன்புமணியை ஒழித்துக் கட்டத் துடிக்கும் வேல்முருகன்… கன்னாபின்னாவென கதறிக் கொதிக்கும் ராமதாஸ்..!

 

அன்புமணியை ஒழித்துக் கட்டத் துடிக்கும் வேல்முருகன்… கன்னாபின்னாவென கதறிக் கொதிக்கும்  ராமதாஸ்..!

எனக்கு பிறகோ அல்லது நானிருக்கும்போதோ இங்கே இணைந்தால் வேல்முருகன் தான் இந்த கட்சிக்கு தலைவராவாரா? அவரது கட்டளைப்படித்தான் என் மகன் அரசியல் செய்ய வேண்டுமா?

அன்புமணியை ஒழித்துக் கட்டத் துடிக்கும் வேல்முருகன்… கன்னாபின்னாவென கதறிக் கொதிக்கும்  ராமதாஸ்..!

தமிழகத்தில் இப்போது பாமக – தேமுதிக இரு கட்சிகளுக்கு இடையில்தான் செம்ம போட்டி.  ஆட்சியை பிடிப்பதிலா? என்று கேட்காதீர்கள். யார் முதலில் அருவம் தெரியாமல் அழிந்து போவதில் என்பதில் தான்.

ஆம் இரண்டு கட்சிகளுமே தங்களது மக்கள் செல்வாக்கையும், தளபதிகளையும் இழந்து தவிக்கின்றன. தேர்தல் அரசியலில் பெரும் தோல்விகளை இவ்விரண்டு கட்சிகளுமே இழந்து கொண்டே இருக்கின்றன. இதனால்தான் ‘யார் முதலில் அழிவது?’ என்பதில் தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. இடையில் போட்டி நடப்பதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அதேவேளை இந்த இரண்டு தலைமைகளில், ‘கட்சியை மீட்டெடுக்கணும்’ எனும் எண்ணம் இருப்பது ராமதாஸுக்குதான். அதனால்தான் மகனுக்கு ராஜ்யசபா சீட் வாங்கிக் கொடுத்து ஒரு வழியாக கட்சியை ஏதோ ஓரளவு அதிகார நிலையில் வைப்பதில் வெற்றி கண்டுள்ளார்.  அதே வேளையில் கட்சியை மீண்டும் வலுவாக கட்டமைப்பதில் அவர் எடுத்த முயற்சிதான் பெரும் பஞ்சாயத்தில் முடிந்துள்ளது என்கிறார்கள்.

பா.ம.க.வை மறு சீரமைக்கும் முயற்சியில் ஒன்றாக, அதிலிருந்து கழன்று சென்ற முன்னாள் முக்கிய நிர்வாகிகளை மீண்டும் பா.ம.க.வுக்குள் அழைத்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். அதுவும் எந்த ஈகோவும் பார்க்காமல் தானே போன் போட்டு அழைக்கிறார். அந்த வகையில் பேராசிரியர் தீரனை அழைத்து, கன்வின்ஸ் செய்து, இணைத்துக் கொண்டவர் இப்போது அடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு வலை வீசியிருக்கிறார்.

 இந்த திட்டத்துக்கான  முதல் ரவுண்ட் வேலைகள் முடிந்துவிட்டன. இது பற்றி வேல்முருகனிடம் பேசியபோது, அழைப்பு வந்ததை மறுத்தாலும்…”இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை.” என்றார். அத்தோடு அவர் நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை. அடுத்து சொன்னதுதான் பா.ம.க.வினுள் பூகம்பத்தை கிளப்பி, ராமதாஸை ரத்தம் கொதிக்க வைத்துவிட்டது.

”இப்போது நானும் பா.ம.க.வுக்கு நிகராக அமைப்பு வைத்துள்ளேன் (த.வா.க). அதனால் இப்போதைக்கு பா.ம.க.வில் சேரும் எண்ணம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் எப்படி என தெரியவில்லை. அந்த கட்சியில் நானும், காடுவெட்டி குருவும் இருந்த இடம் இன்று வரையில் காலியாகத்தான் இருக்கிறது. இப்போது அங்கு ராமதாஸ் மட்டுமே இருக்கிறார்.

எதிகாலத்தில் பா.ம.க.வினரும், எங்கள் கட்சியினரும் விரும்பினால் இணைப்பை நடத்தி, தலைமை தாங்குவேன்.” என்று ஒரே போட்டாக போட்டார். இதில்தான் பா.ம.க. மொத்தமாக சூடாகிவிட்டது. வேமுருகனின் வெடிக்கருத்தை கவனித்த ராமதாஸ் “பா.ம.க.வில் நான் மட்டும்தான் இருக்கேன்னு சொன்னால், எம்.பி.யான என் மகன் அன்புமணி ஒரு தலைவன் இல்லையா? என்ன நினைச்சு பேசுறார் வேல்முருகன்?இந்த கட்சியில்தான் வளைய வந்து, சின்னய்யா சின்னய்யான்னு அன்புவை அழைச்சார். அந்த காலமெல்லாம் மறந்து போச்சா?

எனக்கு பிறகோ அல்லது நானிருக்கும்போதோ இங்கே இணைந்தால் வேல்முருகன் தான் இந்த கட்சிக்கு தலைவராவாரா? அவரது கட்டளைப்படித்தான் என் மகன் அரசியல் செய்ய வேண்டுமா? என்ன கொடுமையான பேச்சுய்யா இது” என்று கர்ஜித்துக் கொண்டிருக்கிறார்.