அன்பழகனின் இறுதி சடங்கில் கதறி அழுத துரை முருகன் மற்றும் ஸ்டாலின்!

 

அன்பழகனின் இறுதி சடங்கில் கதறி அழுத துரை முருகன் மற்றும் ஸ்டாலின்!

உடல்நலக் குறைவால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். கடந்த இரண்டு நாட்களாக அவருக்குச் சுவாசம் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

உடல்நலக் குறைவால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். கடந்த இரண்டு நாட்களாக அவருக்குச் சுவாசம் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை பேராசிரியர் க.அன்பழகன் காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு பிறகு மு.க ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறவும், ஆலோசனை வழங்கவும் தூணாக இருந்த அன்பழகனின் மறைவு ஸ்டாலினை பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளது. 

MKStalin

இந்நிலையில் இன்று மாலை பேராசிரியர் க.அன்பழகனின் உடல் வேலங்காடு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு திமுகவின் கொடி போர்த்தப்பட்டது. அன்பழகனின் இறுதி சடங்கில் அவரது பிரிவை தாங்க முடியாததால் துரை முருகன் மற்றும் ஸ்டாலின் கதறி அழுதனர்.