அன்னை இல்லத்தின் அறுசுவை விருந்து.. நெகிழ்ந்து கண் கலங்கிய கமல்ஹாசன்..!

 

அன்னை இல்லத்தின் அறுசுவை விருந்து.. நெகிழ்ந்து கண் கலங்கிய கமல்ஹாசன்..!

உலக நாயகன் என்று மக்களால் அன்பாகப் போற்றப் படும் கமல்ஹாசன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் கால் பதித்தார்.

உலக நாயகன் என்று மக்களால் அன்பாகப் போற்றப் படும் கமல்ஹாசன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் கால் பதித்தார். அதனையடுத்து, மூன்றாம் பிறை, நாயகன், விஸ்வரூபம், விருமாண்டி உள்ளிட்ட பல படங்கள் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். உலகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான மக்கள் ரசிக்கும் கமல்ஹாசன் சினிமா துறையில் கால்பதித்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டதால் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

Kamal haasan

 நடிகர் சிவாஜி கணேசனுக்கு கமல்ஹாசனை மிகவும் பிடிக்கும் என்பதால், சிவாஜி கணேசனின் மகன் நடிகர் பிரபு அவரது குடும்பத்தாருடன் கமல்ஹாசனை விருந்துக்கு அழைத்து, அவருக்கு அன்புடன் விருந்து பரிமாறியுள்ளார். அதனையடுத்து, கமல்ஹாசனுக்கு  ‘நடிகர் திலகனே பாராட்டிய உலக நாயகனே’ என்ற வாக்கியத்துடன் கவிதை ஒன்றைப் பொரித்து நினைவுப் பரிசு அளித்துள்ளனர்.

Poem

 

இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னைக் கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது’ என்று ட்வீட் செய்து அங்கு எடுத்த புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.