அனைவருக்கும் நிம்மதி, மகிழ்ச்சி தருகிற ஆண்டாக அமையட்டும் : டிடிவி தினகரனின் புத்தாண்டு வாழ்த்து!

 

அனைவருக்கும் நிம்மதி, மகிழ்ச்சி தருகிற ஆண்டாக அமையட்டும் : டிடிவி தினகரனின் புத்தாண்டு வாழ்த்து!

நாளை புத்தாண்டு பிறக்கவிருப்பதையொட்டி மக்கள் அனைவரும் உற்சாகமாகப் புத்தாண்டை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

நாளை புத்தாண்டு பிறக்கவிருப்பதையொட்டி மக்கள் அனைவரும் உற்சாகமாகப் புத்தாண்டை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர். தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதே போல, அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

TTN

” புத்தம் புதிய நம்பிக்கைகளுடன் உற்சாகத்துடன் பிறக்கும் புத்தாண்டில் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். உலகெங்கும் மக்கள் கொண்டாடுகிற நாளாக அமைந்திருக்கிறது.  தமிழக மக்களைப் பிடித்த துயரங்கள் எல்லாம் விடிவுகாலம் பிறப்பதற்கு வழிகாட்டு ஆண்டாக இந்த 2020 புத்தாண்டு அமையட்டும். 

TTN

அடிமை சிறுமதியாளர்கள் அடகு வைத்திருக்கும் உரிமைகளையும், தமிழகத்தின் நலன்களையும் மீட்டெடுப்பதற்குப் பாதை அமைத்துத் தரப்போகிற ஆண்டாக மலரட்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காலத்து மாண்புகளையும் வலிமையையும் தமிழகம் முழுவதும் பெறுவதற்கும் தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் வளர்ச்சியையும் உத்வேகத்தையும் தருவதற்கும் இப்புத்தாண்டு நம்பிக்கைகளை விதைக்கட்டும். வேளாண்மையும் தொழிலும் செழித்திடவும் உழைக்கின்ற அத்தனை மக்களும் உயர்வினை பெற்றிடவும் உகந்த சூழல் உருவாகட்டும். மொத்தத்தில் புத்தாண்டு அனைவருக்கும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தருகின்ற வளமான ஆண்டாகத் திகழட்டும் என வாழ்த்துகிறேன்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.