‘அனைவருக்கும் நன்றி’: நேர்கொண்ட பார்வை படம் குறித்து தயாரிப்பாளர் ட்வீட்

 

‘அனைவருக்கும் நன்றி’: நேர்கொண்ட பார்வை படம் குறித்து தயாரிப்பாளர் ட்வீட்

நேர்கொண்ட பார்வை படம் குறித்து தயாரிப்பாளர்  போனி கபூர் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

சென்னை: நேர்கொண்ட பார்வை படம் குறித்து தயாரிப்பாளர்  போனி கபூர் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான இதை போனி கபூர் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க பெண்களைப் பற்றி உருவாகியுள்ள இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமதுமின்றி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை செய்து வருகிறது. 

ஒரு பெண் நோ என்று சொன்னால் அதன் அர்த்தம் நோ என்று அஜித் பேசிய வசனம் தான் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாக உள்ளது. இதில் அஜித்தின் நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முதன் முதலாகத் தமிழில் தயாரித்துள்ள படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்ததால் அது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குக் கிடைத்த அன்பினால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். #NomeansNo என்ற வசனம் தான் அனைத்து இடத்திலும் வலம் வருகிறது. அனைவருக்கும் மிக்க நன்றி’ என்று மிகவும் மகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.