அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சி: அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

 

அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சி: அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சி உருவாக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்: தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சி உருவாக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வருகையை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த, குறுஞ்செய்தி அனுப்பும் வசதி தொடக்க விழா நடைபெற்றது.

அந்த விழாவில் தமிழக பல்லிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. விரைவில் தமிழகத்தின் அனைத்து திட்டங்களிலும் புதிய புரட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.