“அனில் அம்பானி கீ ஜே” – மோடியை ராகுல் காந்தி கிண்டல்!

 

“அனில் அம்பானி கீ ஜே” – மோடியை ராகுல் காந்தி கிண்டல்!

கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகவே பிரதமர் மோடி பணியாற்றுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சலும்பர்: கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகவே பிரதமர் மோடி பணியாற்றுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அம்மாநில தேர்தலில் வெற்றி பெற்றால், தன்னைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திக் கொள்ள ராகுல் காந்திக்கு பெரும் வாய்ப்பாக இருக்கும்.

அதற்கான பிரச்சார பணிகளில் ராகுல் காந்தி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் பாஜகவும் தீவிரமாகக் களப்பணியாற்றி வருகிறது. 

இந்நிலையில், பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடி ‘பாரத் மாதா கீ ஜே’ என கூறுவதைவிட, ‘அனில் அம்பானி கீ ஜே’ என்று தான் சொல்லியிருக்க வேண்டும்; பாரத மாதாவைப் போற்றிவிட்டு விவசாயிகளை மறந்துவிட்டார் மோடி” என கடுமையாக சாடியுள்ளார்.