அனந்த குமார் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

 

அனந்த குமார் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை: மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராகவும்,நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும் இருந்த அனந்த் குமார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ள இரங்கலில், இளம் வயதிலேயே சமூக பணியாற்ற ஆர்வம் கொண்டு அரசியலுக்கு வந்தவர் அனந்த குமார். அவர் 6 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.