அனகோண்டா நடிகைக்கு ஆப்பு வைத்த தெலுங்கு நடிகை

 

அனகோண்டா நடிகைக்கு ஆப்பு வைத்த தெலுங்கு நடிகை

ஸ்ரீரெட்டி என்றாலே சர்ச்சை தான். அவர் பேசினாலே அந்த தலைப்பில் தான் இணையத்தில் கருத்துக்கள் நிலவிக் கொண்டிருக்கும். இந்த முறை  நடிகை ஸ்ரீ ரெட்டி, தன்னைப் பேஸ்புக் லைவ் மூலம் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக கராத்தே கல்யாணி வழக்கு பதிவு செய்துள்ளார்

சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி மீது தெலுங்கு நகைச்சுவை நடிகையான கராத்தே கல்யாணி, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். ஸ்ரீ ரெட்டி, தனக்கு எதிராக சில கேவலமான கருத்துக்களை சமூக ஊடகங்களில் தெரிவித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். குணசித்திர நடிகை கராத்தே கல்யாணியின் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஸ்ரீ ரெட்டிக்கு எதிராக சில வழக்குகளைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

sri-reddy

ஸ்ரீரெட்டி என்றாலே சர்ச்சை தான். அவர் பேசினாலே அந்த தலைப்பில் தான் இணையத்தில் கருத்துக்கள் நிலவிக் கொண்டிருக்கும். இந்த முறை  நடிகை ஸ்ரீ ரெட்டி, தன்னைப் பேஸ்புக் லைவ் மூலம் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக கராத்தே கல்யாணி வழக்கு பதிவு செய்துள்ளார்

சில திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரங்கள் நடித்திருந்தார் கராத்தே கல்யாணி. 114 மணி நேரம் 45 நிமிடங்கள் மற்றும் 55 வினாடிகள் தொடர்ந்து ஹரிகாதா நிகழ்த்தியதற்காக, கல்யாணி லிம்கா புக் ஆப் ரெகார்டஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

karate-kalyani

சர்ச்சைக்குரிய தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டியுடன் காஸ்டிங் கோச் நிகழ்வு குறித்த விவாதத்தில் கல்யாணி பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கல்யாணி தெரிவித்த கருத்துக்களை மறுத்ததோடு நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் அவரை அவமதித்து பேசியுள்ளார். இதன் காரணமாக கல்யாணி ஸ்ரீரெட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.