“அந்த விஷயத்துக்கு என்ன பண்ணுவே? “-என பணிப்பெண்ணிடம் கேட்ட பைலட் -வீட்டுக்கு அனுப்பப்பட்ட விமானி
இன்றைய காலகட்டத்தில், பெண்களுடன் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஏர் இந்தியாவின் மூத்த விமானி ஒருவர் சமீபத்தில் ஒரு விமான பணிப்பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார். இந்த வழக்கில் ,பைலட் ஏர் ஹோஸ்டஸிடம், “உங்கள் கணவரிடமிருந்து விலகி இருக்கிறீர்கள்
இன்றைய காலகட்டத்தில், பெண்களுடன் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஏர் இந்தியாவின் மூத்த விமானி ஒருவர் சமீபத்தில் ஒரு விமான பணிப்பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார். இந்த வழக்கில் ,பைலட் ஏர் ஹோஸ்டஸிடம், “உங்கள் கணவரிடமிருந்து விலகி இருக்கிறீர்கள்
. நீங்கள் எப்படி உடலுறவு கொள்கிறீர்கள்? நீங்கள் சுயஇன்பம் செய்கிறீர்களா ?”என்று கேட்டாராம் . இது பற்றி பணிப்பெண் போலீசில் புகார் அளித்ததால் விமானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நிர்வாகத்தினர் ஏர் இந்தியா விமானியை இடைநீக்கம் செய்துள்ளனர் .
இந்த வழக்கில் பைலட் சச்சின் குப்தாவை ஒரு குழு விசாரித்து, பாலியல் சுரண்டல் மற்றும் ஏர் ஹோஸ்டெஸ்களுடன் தவறான நடத்தை ஆகியவற்றில் அவர் குற்றவாளி என அக்குழு கண்டறிந்து, அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒரு மூத்த அதிகாரி ஒரு செய்தி நிறுவனத்திடம் “பைலட் சச்சின் குப்தா இப்போது பயிற்றுவிப்பாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்” என்று கூறினார்.
விசாரணையின் போது விசாரணை முடியும் வரை சச்சின் குப்தா எந்த ஏர் இந்தியா அலுவலகத்திற்கும் வர கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.