‘அந்த மாதிரி’ காட்டுங்கள்… அடம் பிடிக்கும் ஹீரோயின்… அலறும் இயக்குனர்..!?

 

‘அந்த மாதிரி’ காட்டுங்கள்… அடம் பிடிக்கும் ஹீரோயின்… அலறும் இயக்குனர்..!?

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் நடிகைகள் என்று தனியாக இருந்தார்கள். ஹீரோயினாக நடிப்பவர்கள் எல்லாம் கணுகால் வரை உடை உடுத்திக்கொண்டுதான் நடிப்பார்கள். அந்த  க்ளாமர் ஆட்டத்திற்கென்று ஜெயமாலினி, ஜோதி லட்சுமி, ஹெலன், அனுராதா, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி என்று பெரிய லிஸ்ட் போடுற அளவுக்கு ஆட்கள் இருந்தார்கள். 

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் நடிகைகள் என்று தனியாக இருந்தார்கள். ஹீரோயினாக நடிப்பவர்கள் எல்லாம் கணுகால் வரை உடை உடுத்திக்கொண்டுதான் நடிப்பார்கள். அந்த  க்ளாமர் ஆட்டத்திற்கென்று ஜெயமாலினி, ஜோதி லட்சுமி, ஹெலன், அனுராதா, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி என்று பெரிய லிஸ்ட் போடுற அளவுக்கு ஆட்கள் இருந்தார்கள்.

silk-smitha

 கதாநாயகிகள் கதைகளில் நாயகிகளாக மட்டுமே நடித்து விட்டுப்போன காலம் மாறியது ஒரு கட்டத்தில் கதாநாயகிகளே க்ளாமர் காட்ட ஆரம்பித்தார்கள். அம்பிகா, ராதா கூட பாடல் காட்சிகளில் மழைக்காட்சிகளில் நடித்தது பரபரப்பாக பேசப்பட்டது. நடிகை அமலா க்ளாமர் காட்டி நடிப்பதுதான் பெரிதாக பேசப்பட்டது. சத்யராஜூடன் ஜீவா படத்தில் அவர் நீச்சல் உடையுடன் நடித்தது அந்தப்படத்தின் வியாபரத்திற்கே பெரிதும் உதவியாக இருந்தது என்பது அப்போதிருந்த விநியோகஸ்தர்களுக்கு நன்றாகவே தெரியும். 
 
கதாநாயகியாக நடித்து வந்த குயிலி ‘நிலா அது வானத்து மேல… தள்ளாடுது ஓடத்து மேல…’ என்று க்ளாமர் நடனம் ஆடியதை பார்த்த ரசிகர்கள் வயசு வித்தியாசமே பார்க்காமல் தள்ளாடியது தனிக்கதை! இவர்கள் காட்டிய கவர்ச்சியெல்லாம் ஒரு கட்டத்தில் போரடித்துப் போக அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோய் நாயகிகளின் ‘தொப்புள்’களில் மையம் கொள்ள ஆரம்பித்தது சினிமா கேமராக்கள். 

 
இந்த தொப்புள் கவர்ச்சியை தொடங்கி  வைத்தது கேப்டன் விஜயகாந்த்.  சின்னக்கவுண்டர் படத்தில் அதை செய்தார். அதன் பிறகு இயக்குநர்கள் தங்கள் படங்களில் செண்டிமெண்ட்டாகவே  ஒரு தொப்புள் காட்சியை வலிய திணித்து ரசிகர்கள் தியேட்டரில் ‘வழிவதை’ வைத்து கல்லா கட்ட ஆரம்பித்தார்கள். இதற்காக தொப்புளை எப்படியெல்லாம் காட்டலாம் என்று உதவி இயக்குநர்கள் டீம் தலைகீழாக நின்று யோசிப்பார்கள். அட்டகாசமான ஐடியாவுக்கு தனிபேமெண்ட் உண்டு!‘ 
 
சின்ன ஜமீன் படத்தில் கார்த்திக் வினிதாவின் தொப்புளில் தக்காளியை துக்கிப்போட்டு விளையாடினார். தக்காளியை பிழிந்து சாறு எடுத்தார். கட்டுமரக்காரன் படத்தில்  கஸ்தூரி வயிற்றில் கடல் மணலை அள்ளிப்போட்டு பிரபு வீடு கட்டினார். இதற்கும் ஒரு படி மேலே போய்  பி.வாசு லவ் பேர்ட்ஸ் படத்தில் நக்மா வயிற்றில் முட்டையை உடைத்து ஊற்றி அது ஆம்லட் ஆகும் காட்சியை படமாக்கினார்.  
 
இதே போல் ஒரு காட்சியை மல்லிகா ஷெராவத்தின் இளைத்த இடுப்பில் ஆம்லெட்  போடும் காட்சியை எடுக்க நினைத்து இயக்குநர் கேட்க, அவர் மறுத்து விட்டார். பிறகுதான் இதைவிட தொப்புள் காட்சியில் பலரும் நடித்திருக்கிறாரகள் என்று அவரிடம் சொல்லப்பட்டது. இதை நினைவில் வைத்திருந்து  ‘மர்டர்’ படத்தில் தொப்புளில் ஹீரோ நாவால் முத்தமிடுவது போன்ற காட்சியில் நடித்தார். 
 
ரஜினி கூட இந்த செண்டிமெண்ட்டுக்கு ஆளாகியிருக்கிறார். அவர் நடித்த  ‘மனிதன்’ படத்தில் ‘காள காள முரட்டுக்காள..’ பாடலில் நடிகை ரூபிணியின் தொப்புளில் விரலை விட்டு ஆட்டுவது போன்ற காட்சியில் நடித்தார். இந்த காட்சி வரும் போது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து கைதட்டினார்கள். சில தியேட்டர்களில் இந்தக் காட்சி வரும்போது, திரைக்குப் பக்கத்தில் இருந்த வண்ண விளக்குகளை எரியவிட்டு அனைத்தார்கள். சத்யராஜ் கூட இப்படி ஒரு காட்சியில் பானுப்பிரியாவுடன் நடித்தார். 

rajini

இப்படி இருந்த சினிமா கவர்ச்சி இன்று எங்கு வந்திருக்கிறது தெரியுமா!? குடும்ப குத்துவிளக்காக தோற்றம் தரும் ‘கன்னக்குழி அழகு’ நடிகை  குடும்பப்பாங்கான ஒரு படத்தில் நடித்து வருகிறார்.ஊட்டியை ஊட்டிக்காரர்களுக்கே வேறுவிதமாக காட்டும் ஒளிப்பதிவாளரின் உதவியாளர்தான் இந்தப் படத்துக்கு இயக்குனர். இந்தப்படத்தில்  ஹீரோயின்னுக்கு காட்டன் புடவையும், கருகமணி நகையும்தான் காஸ்ட்யூம். கதை விருது வாங்கும் தகுதியுடையது என்பதால் ஒத்துக்கொண்டு நடித்து வருகிறார். 
 
ஆனால் அவருக்கு தன்னுடைய தோற்றம் எளிமையாக இருப்பது பிடிக்கவில்லையாம். இதனால் ஒரு கனவு பாடலாவது வைத்து என்னை க்ளாமராக காட்டுங்கள் என்று தொடைக்கும் மேலே மினிஸ்கர்ட் போட்டுக்கொண்டு வந்து இயக்குநரிடம்  அடம் பிடித்து வருகிறார். மீடியாக்களுக்கு இயக்குனர் புகைப்படம் கொடுக்கும் போது,இயக்குனருக்குத் தெரியாமல்  தான் ஸ்பெஷலாக எடுத்த க்ளாமர் போட்டோக்களையும் ஒரு பக்கம் கொடுத்து அனுப்பச்  சொல்கிறாராம் அந்த குழி அழகி!