‘அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்’ : பாஜகவை கலாய்த்த மு.க.ஸ்டாலின்

 

‘அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்’ : பாஜகவை கலாய்த்த மு.க.ஸ்டாலின்

குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிகொள்வோம்” என்று பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினர்.

தந்தை பெரியாரின் 46ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில்  தமிழக பாஜகவின் டிவிட்டர்  பக்கத்தில்,  “மணியம்மையின் தந்தை ஈவே.ராமசாமியின் நினைவு தினமான இன்று!!

ttn

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து, போக்ஸோ (Pocso) குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிகொள்வோம்” என்று பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினர்.

ttn

இதற்கு பல்வேறு  தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த பதிவு  நீக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பெரியாரை  இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது தமிழக பாஜக…அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே?  அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?’ என்று கடுமையாகச் சாடியுள்ளார்.