‘அந்த’ படத்தில் நடித்தது என் மிகப்பெரிய தவறு: நடிகை நயன்தாரா ஓபன் டாக்!

 

‘அந்த’ படத்தில் நடித்தது என் மிகப்பெரிய தவறு:  நடிகை நயன்தாரா ஓபன் டாக்!

பிரபலமான வோக் பத்திரிகையில் இடம்பிடித்து, வோக் அட்டைப் படத்தில் இடம்பிடித்த முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

நடிகை நயன்தாரா தமிழில் முன்னணி நடிகையாக வலம்  வருகிறார்.  பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.

nayan

கடந்த 15 ஆண்டுகளாக தனிக்கென திரையுலகில் தனி முத்திரை பதித்துள்ள இவர், சமீபத்தில் உலகளவில் பிரபலமான வோக் பத்திரிகையில் இடம்பிடித்து, வோக் அட்டைப் படத்தில் இடம்பிடித்த முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 

nayan

இந்நிலையில் நடிகை நயன்தாரா மீடியாவை சந்திக்காமல், எந்த படத்தின் புரொமோஷனிலும் கலந்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் தற்போது ரேடியோ ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது ‘நான் என் கேரியரில் செய்த மிகப்பெரிய தவறு முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி  படத்தில் நடித்தது தான்.

nayan

என்னிடம் கதை சொல்லும் போது  வேறு மாதிரி இருந்தது. அதன் பிறகு படத்தில் என் கதாபாத்திரம் வேறுமாதிரி இருந்தது.  இதனால் நான் மோசடி செய்யப்பட்டதாக உணர்ந்தேன். அதன் பிறகு நான் கதைகளை ஒழுங்காகக் கேட்டு தேர்வு செய்ய துவங்கினேன்’ என்று கூறியுள்ளார்.

nayan

 

கஜினி படத்தில் நயன்தாரா சித்ரா என்ற மருத்துவ மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.