அந்த நச்சு விதையே நீங்கதான்யா… ஹெச்.ராஜாவுக்கு பதிலடி..!

 

அந்த நச்சு விதையே நீங்கதான்யா… ஹெச்.ராஜாவுக்கு பதிலடி..!

சமாதானம் என்ற பெயரில் சிறுபான்மையினரை கண்டிக்க தவறியதும், அவர்களின் தவறுகளை கண்டிக்காமல், மேல் பூச்சு வேலையை செய்தது காங்கிரஸ் என குற்றம் சாட்டி உள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.

சமாதானம் என்ற பெயரில் சிறுபான்மையினரை கண்டிக்க தவறியதும், அவர்களின் தவறுகளை கண்டிக்காமல், மேல் பூச்சு வேலையை செய்தது காங்கிரஸ் என குற்றம் சாட்டி உள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’1947 – ல் மதத்தின் அடிப்படையில் நாடு பிளவுபடுத்த போதே சில நச்சு விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. வகுப்பு மோதல்கள் நடக்க துவங்கிய போது, சமாதானம் என்ற பெயரில் சிறுபான்மையினரை கண்டிக்க தவறியதும், அவர்களின் தவறுகளை கண்டிக்காமல், மேல் பூச்சு வேலையை செய்தது காங்கிரஸ்’’ எனத் தெரிவித்துள்ளார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர்வாசி ஒருவர், ‘’அந்த நச்சு விதையின் பெயர் தான் ஆர்.எஸ்.எஸ். அந்த நச்சு விதையின் வழித்தோன்றல் தான் மகாத்மா காந்தியின் உயிரை காவு வாங்கியது. பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியவர்கள் தான் இன்று தேசபக்தர்களாக வேடம் போட்டுகொண்டு இருக்கிறார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.