‘அந்த தொலைக்காட்சி என்ன ரொம்பவே அலைக்கழிச்சிடுச்சி’…பிக் பாஸ் சரவணன் வேதனை!

 

‘அந்த தொலைக்காட்சி என்ன ரொம்பவே அலைக்கழிச்சிடுச்சி’…பிக் பாஸ் சரவணன் வேதனை!

இவர்  ஒரு எபிசோடில், தன் வாழ்வின் கடினமான பாதையை கடந்துவந்ததை உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார்.

பெண்களை  உரசுவதற்காகவே  பேருந்தில் சென்றுள்ளேன் என்று கூறியதால்  பிக் பாஸ் வீட்டிலிருந்து  அதிரடியாக வெளியேற்றப்பட்டவர்  நடிகர் சரவணன். இவர்  ஒரு எபிசோடில், தன் வாழ்வின் கடினமான பாதையை கடந்துவந்ததை உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார்.

ttn

தனது உறவினர்கள் தன்னிடம் பணம் இல்லை என்ற காரணத்தால் தன்னை மதிக்கவில்லை என்று கூறி அழுது தீர்த்தார். தற்போது படங்களில் நடிப்பது என பிசியாகியுள்ளார்.

 

ttn

இந்நிலையில் பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள அவரிடம்  பிக்பாஸில் பேசப்பட்ட பணம் வந்ததா என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், நிகழ்ச்சியிலிருந்து வெளியே அனுப்பியது வருத்தமா இருந்துச்சி. ஆனாலும்  தொலைக்காட்சி போட்ட அக்ரீமென்டை மீறாமல் இருந்தேன். நூறு நாள் பொறுத்து சம்பளம் கேட்டேன். ஆனால்  என்னை ரொம்பவே அலைகழிச்சாங்க. அப்புறம்  ஒரு வழியா வாங்கிட்டேன். ஆனால்  போன இரண்டு சீசன்களில் முரண்டு பிடித்தவர்களுக்கு உடனே பணம் குடுத்து இருங்காங்கன்னு  கேள்விப்பட்டேன் அது ரொம்பவே வருத்தமா இருந்துச்சி’ என்று கூறியுள்ளார்.