‘அந்த’ காரணத்திற்காக மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனையிட்ட வார்டன்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

 

‘அந்த’ காரணத்திற்காக மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனையிட்ட  வார்டன்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

கழிவறையில் சானிட்டரி நாப்கின்கள் கிடந்ததால் மாணவிகளை ஆடைகளை அகற்றிச் சோதனையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் : கழிவறையில் சானிட்டரி நாப்கின்கள் கிடந்ததால் மாணவிகளை ஆடைகளை அகற்றிச் சோதனையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

college

பஞ்சாப்  மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழக  மாணவிகள் கழிவறையில், பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்களை  வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் விடுதி காப்பாளரும், காவலாளி உள்ளிட்ட நான்கு பேர் இணைந்து  15 மாணவிகளை ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்திச் சோதனையிட்டுள்ளனர். 

napkin

மாணவிகளை நிர்வாணப்படுத்திச் சோதனையிட்டதைக்  கண்டித்து  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து  பெண்கள் விடுதி காப்பாளர் மற்றும் காவலாளி உள்ளிட்ட 4 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

punjab

முன்னதாக இதே போல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பஞ்சாபின் ஃபாசில்காவின் குந்தால் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் கழிவறையில் பயன்படுத்தப்பட்ட ஒரு சானிட்டரி நேப்கின் வீசி எறியப்பட்டதால்  ஆசிரியர்கள் சில மாணவிகளின் ஆடைகளை முழுவதும் களையச் சொல்லி சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அதே கொடூரம் அம்மாநிலத்தில் அரங்கேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.