அந்தரங்க புகைப்படங்கள் லீக்: இறைவன் கண்டிப்பாக தண்டிப்பான்; ஹன்சிகா குமுறல்!

 

அந்தரங்க புகைப்படங்கள் லீக்: இறைவன் கண்டிப்பாக தண்டிப்பான்; ஹன்சிகா குமுறல்!

என் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டவர்களை இறைவன் கண்டிப்பாகத் தண்டிப்பான் என்று நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

சென்னை: என் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டவர்களை இறைவன் கண்டிப்பாகத் தண்டிப்பான் என்று நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

நடிகைகளின் ஹன்சிகாவின் அந்தரங்க புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து எனது ஃபோன் மற்றும் டிவிட்டர் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று ஹன்சிகா கூறியிருந்தார். ஆனால் ஒரு சிலரோ திரைப்பட வாய்ப்புக்காகப் புகைப்படங்களை ஹன்சிகாவே  வெளியிட்டதாகக் கருத்து தெரிவித்திருந்தனர்.

hansika

இந்நிலையில் இது குறித்து ஹன்சிகா கூறியதாவது:- ‘சமீபத்தில் என் அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி அதிர்ச்சியடைய வைத்தன. ஆனால் கவனத்தை ஈர்ப்பதற்காக, இந்த புகைப்படங்களை நானே லீக் செய்ததாக சிலர் சமூக வலைதளங்களில் சொல்லியிருப்பதைக்  கண்டு அதிர்ச்சி அடைந்தேன். சில கருத்துகள் காயப்படுத்துவதாகவும் இருந்தது. இது மனசாட்சி இல்லாதவர்களின் செயல். அதோடு எனக்கு ஆதரவாகவும் பலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். இது எனக்கு ஒரு பாடம். எனது போனையும் டிவிட்டர் கணக்கையும் ஹேக் செய்தவர்கள் யார் என்பது பற்றி 20 பேர் கொண்ட டெக்னிக்கல் டீம் கண்டுபிடித்து வருகிறார்கள். ஹேக் செய்தவர்களை, இறைவன் கண்டிப்பாகத் தண்டிப்பான்’என்றார்.

hansika

சில மாதங்களுக்கு முன்பு  கமல் ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனின்  அந்தரங்க புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.