அந்தமானில் கருணாநிதி சிலை : திறந்து வைக்கப் புறப்பட்டார் மு.க ஸ்டாலின்..

 

அந்தமானில் கருணாநிதி சிலை : திறந்து வைக்கப் புறப்பட்டார் மு.க ஸ்டாலின்..

கருணாநிதி சிலையைத் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் திறந்து வைத்து வரும் மு.க ஸ்டாலின், முதன் முறையாகத் தீவில் திறந்து வைப்பதற்காக இன்று காலை அந்தமான் புறப்பட்டார். 

அந்தமானில் திமுக சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. கருணாநிதி சிலையைத் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் திறந்து வைத்து வரும் மு.க ஸ்டாலின், முதன் முறையாகத் தீவில் திறந்து வைப்பதற்காக இன்று காலை அந்தமான் புறப்பட்டார். 

ttn

தமிழகத்தில் வடிவமைக்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டு அந்தமானில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையின் கீழ் அவரது பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், சுற்றுலா செல்லும் பயணிகள் அனைவரும் கருணாநிதியைப் பற்றி அறிந்து கொள்ளும் விதமாகக் கல்வெட்டுகளும் அமைக்கப்பட உள்ளது. 

ttn

இன்று காலை 4 மணிக்குச் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட மு.க ஸ்டாலினை  எம்.எல்.ஏ தாமோ அன்பரசன் மற்றும் எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர். 2 நாள் பயணமாக அந்தமான் செல்லும் மு.க ஸ்டாலின், அந்தமானில் நடக்கவுள்ள திமுக நிர்வாகி இல்லத் திருமணத்திலும், பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ள உள்ளார். சட்டமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று, எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையைப் புறக்கணித்து மு.க ஸ்டாலின் அந்தமான் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.