அநியாயம் பண்றீங்கடா…. கொரோனா பீதி! பேருந்து முழுவதும் வேப்பிலை மாலை!!

 

அநியாயம் பண்றீங்கடா…. கொரோனா பீதி! பேருந்து முழுவதும் வேப்பிலை மாலை!!

சீனாவின் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுக்க மக்களை பலியாக்கி வருகிறது. மேலும், இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இத்தாலி நாடு இந்த  வைரஸால் வரலாறு காணாத மக்கள் இழப்பைச் சந்தித்து வருகிறது. இந்தியாவிலும் கோரத்தாண்டவம் ஆடும் இந்த வைரஸிற்கு இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 250க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

bus

இந்நிலையில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க மீம்ஸ்களும், கிண்டல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் உலாவருகிறது. அதனொரு பகுதியாக கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க அரசு பேருந்தை சுற்றி வேப்பிலை கட்டி வண்டி ஓட்டிய கோவை அரசு பேருந்து ஓட்டுநர்களின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.