அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு வசந்த மண்டபம் சீரமைக்கும் பணி மும்முரம்

 

அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு வசந்த மண்டபம் சீரமைக்கும் பணி மும்முரம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவத்திற்காக  கோயிலில் இருக்கும் வசந்த மண்டபத்தை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. உலகப் பிரசித்தி பெற்ற விழாவான அத்திவரதர் வைபவம் காஞ்சிபுரத்தில் களை கட்டத் துவங்கியுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவத்திற்காக  கோயிலில் இருக்கும் வசந்த மண்டபத்தை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. உலகப் பிரசித்தி பெற்ற விழாவான அத்திவரதர் வைபவம் காஞ்சிபுரத்தில் களை கட்டத் துவங்கியுள்ளது.

temple

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில்,  அத்தி வரதர் வைபவம் வரும் ஜூலை 1ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. அனந்த சரஸ் குளத்தில் இருந்து எழுந்தருளும் அத்தி வரதர்,  நின்ற கோலத்தில் 24 நாட்களும், சயன கோலத்தில் 24 நாட்களும் பக்தர்களுக்கு  காட்சியளிப்பார்.

temple

 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த அத்தி வரதர் வைபவத்துக்காக தற்போது குளத்தில் இருக்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த வைபவத்தை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் என கோடிக்கணக்கில் பக்தர்கள் காஞ்சிபுரம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுறது. 
இந்த 48 நாட்களில், ஏதாவது ஒரு நாள் அத்தி வரதரை தரிசித்து அருளைப் பெறுங்கள். இந்த நாட்களில் தரிசிக்க தவறினால்,  அடுத்த 40 வருடங்கள் கழித்து மீண்டும் அத்தி வரதரை 2059ம் வருடம் தான் தரிசிக்க முடியும்.
தூர தேசத்தில் இருக்கும், நேரில் அத்தி வரதரை தரிசிக்க முடியாத டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக…