அத்தி வரதர் தரிசனம்: மீண்டும் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

 

அத்தி வரதர் தரிசனம்: மீண்டும் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

அத்திவரதரை தரிசனம் செய்ய கூட்ட நெரிசலில் சிக்கி நேற்று 4 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசனம் செய்ய கூட்ட நெரிசலில் சிக்கி நேற்று 4 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  48 நாட்களுக்கு நடைபெறும் இந்த அரிய காட்சியைக் காண பக்தர்கள் கூட்டம் அலை போதிக்கின்றனர். இது வரை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக நேற்று 4 பேர் உயிரிழந்தனர். 

இந்த நிலையில் இன்றும் வழக்கம் போல் கூட்டம் அலை மோதியது. அதில் சென்னை விருகம் பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(72) என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அருகிலிருந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரையும் சேர்ந்து இதுவரை மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.