அத்தி வரதர் தரிசனம்: சில நிமிடங்களில் கர்ப்பிணிக்கு பிறந்த ஆண் குழந்தை!

 

அத்தி வரதர் தரிசனம்: சில நிமிடங்களில் கர்ப்பிணிக்கு பிறந்த ஆண் குழந்தை!

அத்தி வரதரைத் தரிசனம் செய்துவிட்டு வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு சில நிமிடங்களில் ஆண்  குழந்தை பிறந்துள்ளது . 

அத்தி வரதர் தரிசனம்: சில நிமிடங்களில் கர்ப்பிணிக்கு பிறந்த ஆண் குழந்தை!

 காஞ்சிபுரம் : அத்தி வரதரைத் தரிசனம் செய்துவிட்டு வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு சில நிமிடங்களில் ஆண்  குழந்தை பிறந்துள்ளது . 

 காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது அத்தி வரதர் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். அத்தி வரதர் வரும் 16 ஆம் தேதி வரையிலேயே பக்தர்களுக்குக் காட்சியளிக்கவுள்ள நிலையில் 17 ஆம் தேதி அவர் மீண்டும் குளத்தில் இறக்கப்படவுள்ளார்.

இந்நிலையில் அத்தி வரதரைத் தரிசித்துவிட்டு  இன்று காலை  நிறைமாத கர்ப்பிணியான விஜயா என்பவர் வெளியே வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென்று பிரசவவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோவில் அருகே உள்ள மருத்துவ முகாமிற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரச ஊர்தியில் மருத்துவ உதவியாளர் கௌதம், செவிலியர் யோகவள்ளி உதவியுடன் பிரசவம் நடைபெற்றதாகத் தெரிகிறது. விஜயாவுக்கு பிரசவத்தில் 3 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.