அத்திவரதர் தரிசனம்: கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு

 

அத்திவரதர் தரிசனம்: கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: அத்தி வரதரைத் தரிசிக்க வரிசையில் காத்திருந்த இரண்டு பேர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தனர்.

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  48 நாட்களுக்கு நடைபெறும் இந்த அரிய காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அலை போதிக்கின்றனர். இது வரை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. 

அப்போது கட்டுக்கடங்காத கூட்டத்தில் பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் 
அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 65 வயது மூதாட்டியும், 50 வயது மதித்தக்கத்த ஒரு பெண்ணும் மயங்கி விழுந்தனர். உடனே அவர்களைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தனர். 

kanchipuram

மேலும், அத்திவரதரை தரிசிக்க வரிசையில் காத்திருந்த போது 3 பேர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.