அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை, திருச்சியிலும் விற்பனை துவக்கம்

 

அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை, திருச்சியிலும் விற்பனை துவக்கம்

தலா 20 ரூபாய் என ஒரு லட்சம் சிறப்பு அஞ்சல் உறைகளை இந்திய அஞ்சல் துறை விற்பனை செய்கிறது. விற்பனையை பரவலப்படுத்தும் முயற்சியாக, திருச்சி தலைமை தபால் நிலைய அஞ்சல் தலை சேகரிப்பு பிரிவில் அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை விற்பனை துவக்கப்பட்டது.

நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வான அத்திவரதர் தரிசனத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து, நவீன தொழில்நுட்பத்தில் சிறப்பு அஞ்சல் உறையை கவர்னர் பன்வாரிலால் ஆளுநர் மாளிகையில் வெளியிட்டார். முதன்மை அஞ்சல் துறை தலைவர்கள் சம்பத், சாருகேசி, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆனந்த், இந்து அறநிலையத் துறை கமிஷனர் பனீந்திர ரெட்டி, செயல் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

Special Stamp

தலா 20 ரூபாய் என ஒரு லட்சம் சிறப்பு அஞ்சல் உறைகளை இந்திய அஞ்சல் துறை விற்பனை செய்கிறது. விற்பனையை பரவலப்படுத்தும் முயற்சியாக, திருச்சி தலைமை தபால் நிலைய அஞ்சல் தலை சேகரிப்பு பிரிவில் அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை விற்பனை துவக்கப்பட்டது. அஞ்சல் தலை சேகரிப்பு நிலைய அலுவலர் ராஜேசிடம் சிறப்பு உறையினை அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ரகுபதி , யோகா ஆசிரியர் விஜயகுமார், சதீஷ், கார்த்தி, தாமோதரன் உள்ளிட்டோர் ஆர்வமுடன் வாங்கினார்கள்.