அத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை!

 

அத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை!

நாற்பது ஆண்டுகள் ஜலவாசத்திற்குப் பிறகு காட்சியருள எழுந்திருக்கும் அத்திவரதரை தரிசிக்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற 23ஆம் தேதி காஞ்சீபுரம் வருகிறார். முதல்நாள் அத்திவரதரை தரிசனம் செய்யும் மோடி, காஞ்சீபுரத்திலேயே தங்கி மறுநாள் காலையில் நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை மீண்டும் தரிசனம் செய்ய உள்ளார்.

நாற்பது ஆண்டுகள் ஜலவாசத்திற்குப் பிறகு காட்சியருள எழுந்திருக்கும் அத்திவரதரை தரிசிக்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற 23ஆம் தேதி காஞ்சீபுரம் வருகிறார். முதல்நாள் அத்திவரதரை தரிசனம் செய்யும் மோடி, காஞ்சீபுரத்திலேயே தங்கி மறுநாள் காலையில் நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை மீண்டும் தரிசனம் செய்ய உள்ளார். மோடி வருகையையொட்டி காஞ்சீபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

Aththivaradhar

இதுநாள்வரை லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, வெளிமாநிலங்களிலிருந்தும் வந்து தரிசனம் பெற்றுள்ளனர். முன்னதாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் தரிசனம் செய்தனர். பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து தமிழக அமைச்சர்களும் வருகை தர உள்ளனர். தரிசனத்திற்குப் பிறகு, 40 ஆண்டுகளுக்கு முன்னதாக அத்திவரதரை  தண்ணீருக்குள் போட்டது நேருவின் சதி என பிரதமர் சொல்லமாட்டார் என நம்புவோம்.