அத்திவரதரை குடும்பத்துடன் தரிசித்தார் விஜயகாந்த்!

 

அத்திவரதரை குடும்பத்துடன் தரிசித்தார் விஜயகாந்த்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை  அத்தி வரதரை தரிசிக்கலாம்.

காஞ்சிபுரம் : தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தனது குடும்பத்தாருடன் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை  அத்தி வரதரை தரிசிக்கலாம். அந்த வகையில் அத்தி வரதரை லட்சக்கணக்கான  மக்கள் வழிபட்டு அவரது அருளைப் பெற்றுச் செல்கின்றனர். 

athivaradhar

இந்நிலையில் விஜயகாந்த் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வந்து அத்தி  வரதரை தரிசித்தார். வரதராஜ பெருமாள் கோவில் மேற்கு மண்டபம் வரை காரில் வந்த அவர் அங்கிருந்து வசந்த மண்டபம் அழைத்துச் செல்லப்பட்டார். பின்பு அத்திவரதரை குடும்பத்துடன் வழிபட்ட அவர்கள்,விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மித்ரன் படம் வெற்றி பெறவும் பூஜை நடத்தினர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ’40 வருடங்கள் கழித்து நடக்கும் இந்த வைபவத்தைத் தரிசிப்பது மிகவும் உன்னதமானது’ என்றார்.

athivaradhar

 

முன்னதாக பிரதமர் மோடி அத்தி  வரதரை தரிசிக்க  வரும் ஜூலை 23 ஆம் தேதி காஞ்சிபுரம் வருவது  குறிப்பிடத்தக்கது.