அத்திவரதருக்கு பின் அதிகமான கூட்டத்தை பிகில் இசை வெளியீட்டு விழாவில் பார்க்கிறேன் – நடிகர் விவேக் 

 

அத்திவரதருக்கு பின் அதிகமான கூட்டத்தை பிகில் இசை வெளியீட்டு விழாவில் பார்க்கிறேன் – நடிகர் விவேக் 

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது.

இந்த விழாவில் நடிகர் விஜயின் பேச்சை கேட்க ரசிகர்கள் பலர் டிக்கெட்களை அடித்து பிடித்து வாங்கி இசைவெளியீட்டு விழாவுக்கு சென்றுள்ளனர். விஜய் தனது அரசியல் அவதாரத்தை பற்றி இந்த விழாவில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

bigil

இந்நிலையில்  விழாவில் கலந்துகொண்ட நடிகர் விவேக் மேடையில் பேசுகையில், “நான் இங்கு வரும் வழியில் 3 மணி நேரம் டிராபிக்கில் சிக்கினேன். வெளியே அவ்வளவு கூட்டம் நிற்கிறது. என்ன மாஸுங்க விஜய் தம்பிக்கு..!.. அத்திவரதருக்கு பின் அதிகமான கூட்டத்தை பிகில் இசை வெளியீட்டு விழாவில் பார்க்கிறேன்.நான் ஏழெட்டு படங்களாக விஜய்யை பார்க்கிறேன். அப்படியே இருக்கிறார். வெற்றி பொதுவாக ஒரு போதையைக் கொடுக்கும். அது விஜய்யின் தலையில் ஏறியதே இல்லை” என தெரிவித்தார்.