‘அது’ நடக்காத வரை அமமுக எந்த தேர்தலிலும் போட்டியிடாது : தினகரன் சூளுரை!

 

‘அது’ நடக்காத வரை அமமுக  எந்த தேர்தலிலும் போட்டியிடாது : தினகரன் சூளுரை!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று  டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று  டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ec

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும்  அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல்  நடக்கும் என்று  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 23 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கலும், செப்டம்பர் 30 ஆம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யக் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்  வேட்பு மனு மீதான  பரிசீலனை அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் என்றும் இடைத்தேர்தல் முடிவுகள் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ttv

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் யுடிவி தினகரன் இன்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது.அமமுகவுக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை’ என்று தெரிவித்தார்.முன்னதாக அமமுகவை தேர்தல் ஆணையத்தில் யுடிவி தினகரன் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.