“அது என்ன கல்யாண வீடியோவா ஊரெல்லாம் பரப்ப “-அந்தரங்க வீடியோ பரவியதால் அந்தரத்தில் தொங்கிய காதலி.. 

 

“அது என்ன கல்யாண வீடியோவா ஊரெல்லாம் பரப்ப “-அந்தரங்க வீடியோ பரவியதால் அந்தரத்தில் தொங்கிய காதலி.. 

சிறுமியும் அவளுடைய காதலனும் ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் ஒரு நெருக்கமான வீடியோவை படம்பிடித்திருந்தனர். ஆனால் காதலன் அதை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். பின்னர் அவர்கள் அதை மேலும் பலருக்கு பரப்பினார்கள்.

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சரநகர் பகுதியில் 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். அவரது காதலனுடன் அந்த பெண் நெருக்கமாக இருக்கும் வீடியோவை மூன்று நண்பர்களுக்கு கசிய விட்டார். பின்னர் அவர்கள் அதை மேலும் பலருக்கு பரப்பினார்கள். இதனால் மனமுடைந்த சிறுமி தற்கொலை  செய்துகொண்டுள்ளார். பிப்ரவரி 29 அன்று, சிறுமியின் பெற்றோர் அவளின் காதலன் மீது பாலியல் பலாத்கார புகாரை பதிவு செய்தனர்.

suicide

சிறுமியும் அவளுடைய காதலனும் ஒருவருக்கொருவர் சம்மதத்துடன் ஒரு நெருக்கமான வீடியோவை படம்பிடித்திருந்தனர். ஆனால் காதலன் அதை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ பலரிடம் கசிந்ததும், மனமுடைந்த சிறுமி  திங்கள்கிழமை மாலை தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டாள். 

“காதலன் மீது ஐபிசி மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டம் ஆகியவற்றின் கீழ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோவை பரப்பியதற்காக அவரது மூன்று நண்பர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.