அதிரவைத்த செந்தில் பாலாஜி; மிரண்டு போயிருக்கும் திமுக பெருந்தலைகள்!

 

அதிரவைத்த செந்தில் பாலாஜி; மிரண்டு போயிருக்கும் திமுக பெருந்தலைகள்!

திமுகவிற்கு தன்னை நிரூபிக்கும் விதமாக பிரம்மாண்ட கூட்டத்தை தன் சொந்த ஊரான கரூரில் நடத்திக் காட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

கரூர்: திமுகவிற்கு தன்னை நிரூபிக்கும் விதமாக பிரம்மாண்ட கூட்டத்தை தன் சொந்த ஊரான கரூரில் நடத்திக் காட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

அமமுகவின் மாநில அமைப்பு செயலாளர், கரூர் மாவட்ட செயலாளர் என டிடிவி தினகரனின் ஆஸ்தான தொண்டராக வலம் வந்தவர் செந்தில் பாலாஜி. 2011-16 ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் பவர்ஃபுல் போக்குவரத்துத்துறை அமைச்சராக வலம் வந்த இவர், ஜெ. மறைவிற்குப் பின் அதிமுக சிதறியபோது தினகரனின் தீவிர ஆதரவாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். 

கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பொருந்திய அரசியல் பிரமுகராக அறியப்படும் இவர், தினகரன் மீது ஏற்பட்ட அதிருப்தியால், அவரிடம் இருந்து விலகுவதென முடிவெடுத்துள்ளார். அதன்பின் அதிமுகவிற்கு சென்றால், ஏற்கனவே கரூர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சீனியர்கள் இருப்பதால் தனக்கான முக்கியத்துவம் கிடைக்காது என கருதியதால், கொங்கு பகுதியில் போதுமான அளவு வாக்கு வங்கி இல்லாமல் தவிக்கும் திமுகவில் சேர்ந்தால், எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என முடிவெடுத்துள்ளார். 

senthil

செந்தில் பாலாஜியின் இந்த முடிவுக்கு பின்னால் மற்றொரு காரணமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, செந்தில் குமார் என இருந்த அவரின் பெயரை செந்தில் பாலாஜி என மாற்றினால் தான் அரசியலில் நிலைக்க முடியும் என அறிவுரை வழங்கிய அவரின் ஆஸ்தான ஜோதிடர் தான், இந்த முடிவையும் எடுக்க வைத்துள்ளதாக பேச்சுகள் அடிபட்டது. 

dmk

இதெல்லாம் ஒரு வழியாக முடிந்து, அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து அதிகாரப்பூர்வமாக தன்னை திமுகவில் இணைத்துக் கொண்ட செந்தில், தன் சொந்த மண்ணில் வைத்து தன் பலத்தை காட்ட வேண்டும் என ஸ்டாலினிடம் தேதி கேட்டுள்ளார். அவரும் 27ம் தேதி தான் வருவதாகவும், பணிகளை ஆரம்பிக்குமாறும் கூறியுள்ளார். 

senthil

அதனையடுத்து, தன் ஆதரவாளர்களை அழைத்த செந்தில் பாலாஜி, “தளபதி வராருய்யா. தேதி கொடுத்திருக்காரு. கொங்கு மண்டலத்துல நம்ம யாரு, நம்ம செல்வாக்கு என்னனு காட்டியே ஆகனும். அப்ப தான் வெயிட்டான பதவி கேட்டு வாங்க முடியும். எவ்வளவு செலவானாலும் பரவா இல்ல. எல்லாரையும் நல்லா வேல செய்ய சொல்லுங்க” என முடிக்கிவிட்டுள்ளார். 

kn nehru

அதன் நீட்சியாகவே, இன்று லட்சம் பேருக்கு மேல் திரண்ட மாபெரும் பொதுக்கூட்டத்தை வெற்றி கரமாக நடத்திக் காட்டியுள்ளார் செந்தில் பாலாஜி. அப்பகுதி திமுகவில், செல்வாக்கு நிரம்பியவர்களான முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, நன்னியூர் ராஜேந்திரன் போன்ற சீனியர்களே இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லையாம். இதனால், எங்கு நம் ஆதிக்கத்திற்கு பாதகம் வந்துவிடுமோ என கலக்கத்தில் இருக்கிறார்களாம் திமுக பெருந்தலைகள்!