அதிரடி அதிர்ஷ்டத்தால் லட்சாதிபதியாகப்போகும் நிர்வாகிகள்… அதிமுகவினருக்கு வாய்த்த கொடுப்பினை..!

 

அதிரடி அதிர்ஷ்டத்தால் லட்சாதிபதியாகப்போகும் நிர்வாகிகள்… அதிமுகவினருக்கு வாய்த்த கொடுப்பினை..!

அடித்த பணத்தில் பகுதி செயலாளர்கள் முதல் நகர செயலாளர்கள் வரை லட்சாதிபதிகளாக மாறிவிட்டதாக அவர்களுக்குள் இப்போதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக களமிறங்கும் ஏ.சி.சண்முகத்தை சுற்றி ஒரு பெரிய கூட்டமே படையெடுத்து வருகிறது.

ஏ.சி.சண்முகம் ஏற்கனவே பணத்தை தண்ணீராக செலவிட்டார். இதில் பாதிதான் வாக்காளர்களுக்கு போய் சேர்ந்துள்ளது. மீதி நிர்வாகிகள் வீட்டுக்கு போய் சேர்ந்து விட்டது. அத்தோடு இல்லாமல் அதிமுக நிர்வாகிகளுக்கும் தேர்தல் பணிக்காக வாரி வாரி கொடுத்தாராம் ஏ.சிஎஸ். அந்த பணத்தை வைத்து சிலர் வீடே கட்டிவிட்டார்கள் எனச் சொல்லப்படுகிறது.vellore

சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்க வசதியாக பாஜக தரப்பு தேர்தல் பணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. இந்த நிலையில் மீண்டும் தேர்தல் வந்தால் அவரே நிற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பில் இருந்தனர். அப்படியே தற்போது மக்களவை தேர்தலில் மீண்டும் அவர் போட்டியிடுவதால் அதிமுக நிர்வாகிகள் குஷி அடைந்துள்ளனர்.acs

கடந்த முறை அடித்த பணத்தில் பகுதி செயலாளர்கள் முதல் நகர செயலாளர்கள் வரை லட்சாதிபதிகளாக மாறிவிட்டதாக அவர்களுக்குள் இப்போதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த முறையும் ஒரு தொகையை அப்படியே அடித்து விடலாம் என்று காத்து இருக்கிறார்களாம். அதற்கு ஏற்ப வேட்பாளரும் அவர்களை மட்டும் தான் நம்புகிறாராம்.

vellore

 அதன்படி ஆளுங்கட்சி, கூட்டணி கட்சி என்று பாராமல் எங்கு சென்றாலும் சிலரை மட்டும் அழைத்து சென்று வருகிறார். இதனால் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் சிறுபான்மையினர் ஓட்டுக்காக பாஜகவைஓரம்கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தற்போது ஏ.சி.எஸ் நடத்தும் முக்கிய கூட்டங்களில் அவர்கள் தலைக்காட்டுவதே இல்லை என்கிறார்கள்.