அதிரடியாக மாறிய ப.சிதம்பரம்… கலக்கத்தில் அழகிரி..!

 

அதிரடியாக மாறிய ப.சிதம்பரம்… கலக்கத்தில் அழகிரி..!

அடுத்து அவர் தேசிய அரசியலை கைவிட்டு காங்கிரஸ் மாநில தலைவராகவும் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

மாநில அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் ப.சிதம்பரம். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், டெல்லி திஹார் ஜெயிலுக்கு போய் விட்டு திரும்பியதில் இருந்து அவரது அரசியல் நடவடிக்கைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரைக்கும் தேசிய அரசியலில் கவனமாக இருந்தவர், தற்போது மாநில அரசியலிலும்  கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.

முன்பெல்லாம், சத்தியமூர்த்தி பவன் பக்கமே எட்டி பார்க்காதவர் தற்போது தொடர்ந்து இரண்டு மூன்று நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து கலந்து கொண்டார். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக, சென்னையில் நடக்கும் பேரணி, கருத்தரங்குகளில் தொடர்ந்து கலந்து கொள்கிறார்கள்.chidambaram

எல்லாம் சிறை தந்த பாடம் என்கிறார்கள். அடுத்து அவர் தேசிய அரசியலை கைவிட்டு காங்கிரஸ் மாநில தலைவராகவும் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் கே.எஸ்.அழகிரியின் ஆட்டம் க்ளோஸ் ஆகலாம் என்கிறார்கள். இதனால்,ன் தங்களது பதவிகள் பறிபோகலாம் என காங்கிரஸ் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.