அதிமுக வேட்பாளர் வீட்டில் ரூ. 38 லட்சம் ரொக்கம், 1,192 மது பாட்டில்கள் பறிமுதல்!

 

அதிமுக வேட்பாளர் வீட்டில் ரூ. 38 லட்சம் ரொக்கம், 1,192 மது பாட்டில்கள் பறிமுதல்!

மதுபாட்டில்கள் போன்றவை வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் பாலு மண்டல மாணிக்கம் பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், இவரது அம்மா அதேபகுதியில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு,  பாலு வீட்டில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் மதுபாட்டில்கள் போன்றவை வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது.

ttn

இதை தொடர்ந்து பாலு வீட்டில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில்,  ரூ. 38 லட்சம் ரொக்கம் மற்றும் 1,192 மது பாட்டில்கள் உள்ளிட்டவற்றைப் போலீசே பறிமுதல் செய்தனர்.

ttn

முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட குற்றச் சம்பவங்கள், புகார்கள் தொடர்பாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்க 948991744 என்ற  எண்ணை தொடர்பு கொள்ளலாம் என காவல் கண்காணிப்பாளர் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில்,  அந்த எண்ணிற்கு வந்த தகவலின் அடிப்படையிலேயே பாலு வீட்டில் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.