அதிமுக முக்கியப்புள்ளிகளை ரகசியமாக சந்தித்த செந்தில் பாலாஜி… கண் சிவந்து கடுப்பான எடப்பாடி..!

 

அதிமுக முக்கியப்புள்ளிகளை ரகசியமாக சந்தித்த செந்தில் பாலாஜி…  கண் சிவந்து கடுப்பான எடப்பாடி..!

அமைதியாக இருந்து பின்னணியில் ஆட்சி கவிழ்ப்புக்கான விஷயங்களை முடுக்கி விடும் திட்டத்தில் தான் ஸ்டாலின் அப்படி சொன்னதாகக் கூறப்படுகிறது. பாஜக பாதுகாத்து வரும் அதிமுக ஆட்சியை மு.க.ஸ்டாலின் அத்தனை எளிதாக கலைத்து விடுவாரா என்பது சந்தேகமே.

அதிமுக ஆட்சியை கவிழ்க்க தூண்டில் போட்டு தூண்டில் போட்டு துவண்டு விட்டது திமுக. விட்ட குறை தொட்ட குறையாக இனியும் விட்டு வைக்கக்கூடாது என மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு அஸ்திரத்தை எடுக்கத் தொடங்கி இருக்கிறார் மு.க.ஸ்டாலின். senthil balaji

எத்தனையோ முறை அஸ்திரத்தை வீசினாலும், கடந்த மாதம் ஸ்டாலின் சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன் ஓ.எம்.ஜி  நிறுவனத்தின் நிர்வாகி சுனிலும், செந்தில் பாலாஜியையும் களமிறக்கி விட்டு போனார்.  இப்போது வரை பல்ஸ் பார்த்த அவர்கள்  கடந்தவாரம்  ஸ்டாலின் வீட்டிலேயே கூடி ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி விவாதித்திருக்கிறார்கள்.eps

அத்தோடு மட்டுமல்ல  செந்தில் பாலாஜி கடந்த வாரம் சென்னையைச் சேர்ந்த சில அதிமுக புள்ளிகளையும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அதிமுகவில் இருக்கும் தனக்கு மிக நெருக்கமானவர்களை மீண்டும் செந்தில்பாலாஜி சந்தித்து பேசியிருக்கிறார். இந்தத் தகவல் எடப்பாடி காதுகளுக்கும் சென்றிருக்கிறது. சட்டமன்றம் வரும் 20 ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் திமுக முதல்வர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை இந்தக் கூட்டத் தொடரிலேயே எடுத்துக் கொள்வது பற்றி சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டும். சபாநாயகர் தனபால் அவ்வாறு உடனே எடுத்துக் கொள்வாரா என்பதும் கேள்விக்குறிதான்.senthil balaji

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கைவிடுவதாக அறிவித்தார்  ஸ்டாலின். உண்மையில் அவர் அப்படிச் சொன்னால் அதிமுக அந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்துவிடும்.  அமைதியாக இருந்து பின்னணியில் ஆட்சி கவிழ்ப்புக்கான விஷயங்களை முடுக்கி விடும் திட்டத்தில் தான் ஸ்டாலின் அப்படி சொன்னதாகக் கூறப்படுகிறது. பாஜக பாதுகாத்து வரும் அதிமுக ஆட்சியை மு.க.ஸ்டாலின் அத்தனை எளிதாக கலைத்து விடுவாரா என்பது சந்தேகமே.