அதிமுக – பாமக ஒரு திருட்டு கூட்டணி: பிரபல நடிகர் கடும் தாக்கு!

 

அதிமுக – பாமக  ஒரு திருட்டு கூட்டணி: பிரபல நடிகர் கடும் தாக்கு!

அதிமுக – பாமக ஒரு திருட்டுக் கூட்டணி என்று நடிகர் ரஞ்சித் கடுமையாக விமர்சித்துள்ளார். 

சென்னை: அதிமுக – பாமக ஒரு திருட்டுக் கூட்டணி என்று நடிகர் ரஞ்சித் கடுமையாக விமர்சித்துள்ளார். 

அ.ம.மு.க.வில் இணைந்த ரஞ்சித் 

ranjith

பா.ம.கவின் மாநில துணைத்தலைவராக இருந்த நடிகர் ரஞ்சித் பாமக-வில் இருந்து விலகி டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ranjith

மேலும், மாற்றம் முன்னேற்றம் என்று  நம்பி வந்த இளைஞர்கள் மத்தியில் மண்ணைப் போட்டுவிட்டது பா.ம.க. சிங்கம் மாதிரி இருந்த அன்புமணி கோழையாகிவிட்டார் என்று விமர்சனம் செய்தார். இதை தொடர்ந்து மக்களவை தேர்தலுக்காக, அமமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். 

பாமக – அதிமுக ஒரு  திருட்டுக் கூட்டணி

ranjith

இந்நிலையில் சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்த ரஞ்சித், பாமக – அதிமுக ஒரு  திருட்டுக் கூட்டணி. அரசியல் வரலாற்றில் இது போன்ற கீழ்த்தரமான கூட்டணி எங்கேயாவது அமைந்துள்ளதா? நீ திருடன், நான் திருடன் என்று சட்டையைப் பிடித்து அடித்து கொள்ளாத குறையாக இருந்துவிட்டு, இப்போது கூட்டணி அமைத்திருப்பதும், ஓட்டு கேட்டு வருவதும் நியாயமா? மக்கள் இதைக் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  

ranjith

தேர்தல் பரப்புரையில் அன்புமணி அழுதது கூட திரைக்கதை தான்.  ஓட்டு கேட்டு வரவேண்டுமே என்று ஊருக்கு ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து பூஜை போடுவது பின் அதை அப்படியே விட்டுவிடுவது. கடைசி வரை திட்டம் நடைமுறைப்படுத்தப் படாது என்பது தான் உண்மை’ என்று கடுமையாகச் சாடினார்.

முன்னதாக அமமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய ரஞ்சித், சசிகலா இறந்துவிட்டதாகக் கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க:  காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு, ஆண்கள் கொடுத்த கொடூர தண்டனை: வைரல் வீடியோ!